பென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ஆம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
இந்நிலையில் நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக ஓசிரிஸ்-ரெக்ஸ் செயற்கைக் கோள் தரையிறங்கியது.
60 கிராம் எடைக்கு மண் மாதிரியை சேகரித்துள்ள ஓசிரிஸ்-ரெக்ஸ் செயற்கைக் கோள் 2023-ல் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மண்ணை வைத்து நடத்தப்படும் ஆய்வு சூரிய குடும்பம் எப்படி தோன்றியது என்ற புதிரை விடுவிக்க உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.